டெல்டா பாசனம்-ஜூன் 12ல் திறக்கப்படுகிறது மேட்டூர் அணை
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூ்ர் அணை திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதம் 12ம் தேதி திறந்துவிடப்படவுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால், கர்நாடகம் தண்ணீர் தராமல் இழுத்தடிப்பு செய்வது வழக்கமாகிவிட்டதால் கடந்த பல ஆண்டுகளாகவே குறிப்பிட்ட நாளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது என்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது.
ஆனால், அவ்வப்போது இயற்கை கருணை காட்டி அணையை நிரப்பிவிடுவதும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் பருவம் தவறி பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து திருப்திகரமாகவே இருந்தது.
அணையின் நீர்மட்டமும் திருப்திகரமாக உள்ளதால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் (ஜூன் 12) தண்ணீரை திறந்துவிட அரசு முடிவு செய்துள்ளது.
அணையின் நீர் மட்டம் குறித்து பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் நாகராஜனும் ஆய்வு செய்தார்.
இன்று காலை 8 மணியளவில் அணையின் நீர் மட்டம் 97.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்ந்தது.
அணையிலிருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications