பாஜக ராஜ்யசபா எம்.பி நாராயணன் தகுதி நீக்கம்
டெல்லி: பாஜகவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் கேப்டன் ஜெய் நாராயணன் பிரசாத் நிஷாத், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான அறிவிப்பை ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி நேற்று ராஜ்யசபாவில் வெளியிட்டார். இதையடுத்து அவர் பதவி இழந்தார்.
பீகாரிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிஷாத், மார்ச் 28ம் தேதி முதல் தனது எம்.பி. பதவியை இழந்துள்ளதாக அன்சாரி அறிவித்தார்.
நிஷாத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அன்சாரி குறிப்பிடுகையில், பாஜக உறுப்பினர் சுஷ்மா சுவராஜ், கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அப்போதைய ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத்திடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நிஷாத் நடந்து கொண்டுள்ளார். எனவே அவரை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து புகார் மனுவின் நகல்களை கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி நிஷாத்துக்கும், ராஜ்யசபா பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கும் ஷெகாவத் அனுப்பி வைத்தார். அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டிருந்தார்.
2006ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஜஸ்வந்த் சிங், ஷெகாவத்துக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், சுஷ்மா சுவராஜ் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும், அதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து நிஷாத் ராஜ்யசபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
2006ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நிஷாத் அனுப்பிய பதிலில், தன் மீதான புகார்களை மறுத்திருந்தார். மேலும், 20005ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகி விட்டதாகவும், அதன் பின்னர் நவம்பர் 17ம் தேதி அதை வாபஸ் பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனக்கு கட்சிக் கூட்டங்கள் தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல்கள் தரப்பட்டதாகவும், மாதந்தோறும் கட்சிக்கு ரூ. 1200 உறுப்பினர் நிதியாக தர வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த பதில் மனுக்களை 2006ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி உரிமைக் குழுவுக்கு ஷெகாவத் அனுப்பி வைத்தார். விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தார்.
உரிமைக் குழு தனது அறிக்கையை 2007ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி புதிய ராஜ்யசபா தலைவரிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் நகல் நிஷாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. என் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜனவரி 8, மார்ச் 11, மற்றும் 26 ஆகிய தேதிகளில் அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை.
எனவே 1985ம் ஆண்டு கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நிஷாத் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
பி.ஏ.சங்மா ராஜினாமா ஏற்பு:
இதற்கிடையே, முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்கமா தனது லோக்சபா உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications