நண்பர்களுக்கு இளம்பெண் 'விருந்து': சித்தப்பா கைது
நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார்.
நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரை வள்ளியூர் போலீசார் அலட்சியம் செய்தனர். கற்பழிப்பு வழக்காக பதிவு செய்யாமல் சாதாரண வழக்காகப் பதிந்தனர்.
இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்யப்பட்டதையடுத்து சிவனை போலீசார் கைது செய்தனர். வழக்கை சரியாக பதிவு செய்யாத எஸ்ஐ முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications