லாரியில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
ஆறுமுகநேரி: விடுமுறையில் வேலைக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் லாரியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அடுத்த ஆறுமுகநேரி டி.எஸ்.ராஜாநகரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து மகன் அருண்குமார். பிளஸ் 2 தேர்வு , எழுதிய முடித்த அருண் விடுமுறையில் பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். வேலையை முடித்து விட்டு அருண்குமார் சைக்கிளில் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அங்குள்ள பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அருண்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். லாரி டயரில் சிக்கி படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications