பாளை சிறையில் கஞ்சா, சிம் கார்டுகள் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் சிம்கார்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறைகளில் கைதிகளிடையே செல்போன் மற்றும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை, தமிழகத்தில் புழல், மதுரை, பாளையங்கோட்டை உள்பட 10 மத்திய சிறைகளிலும் திடீர் சோதனைகள் செய்து வருகின்றன.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். ஆறுமுகநேரியைச் சேர்ந்த கைதி பாலகிருஷ்ணனிடமிருந்து ரூ.2,600 பறிமுதல் செய்தனர்.
அங்குள்ள கழிவறையில் சோதனை செய்தபோது தலா 50 கிராம் எடை கொண்ட 5 கஞ்சா பொட்டலங்களும், செல்போன் சிம்கார்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications