அண்ணியைக் கற்பழித்துக் கொன்று கைதான கமல் ஷா மர்ம சாவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பார்வதி ஷா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மைத்துனர் கமல் ஷா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் ஷா, புதுச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரேம்சந்த் ஷாவின் மனைவி பத்மா ஷா. இவர்களுக்கு ரவி ஷா, கமல் ஷா ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
ரவி ஷாவுக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த பார்வதியைத் திருமணம் செய்து வைத்தனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியன்று வீட்டில் பார்வதி ஷா மட்டும் தனியாக இருந்தார். அப்போது கமல்ஷா, தனது அண்ணியைக் கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்தார்.
முதலில் திருடர்கள் வந்து அண்ணியைக் கொன்று விட்டதாக கமல்ஷா நாடகமாடினார். ஆனால் பார்வதி ஷாவின் சகோதரர்கள் இது கொலை என்று புகார் கூறவே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் உண்மை தெரிய வந்தது.
இந்த வழக்கில் கமல்ஷா, பத்மா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரவி ஷா தலைமறைவாகி விட்டார். இன்னும் அவர் போலீஸ் கையில் சிக்கவில்லை.
ரவி ஷாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. பின்னர் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி ஷா அப்பீல் செய்தார். அதில் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கமல்ஷா. இந்த நிலையில் நேற்று தனது அறைக்கு அடுத்த அறையில் கமல் ஷா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
ஸ்பூனை கூர்மையான கத்தி போல மாற்றி அவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் இது கொலையாக இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. கமல் ஷாவின் மார்பில் குத்தப்பட்ட காயங்களும், வடுக்களும் தெரிகின்றன. எனவே கைதிகளுடன் நடந்த மோதலில் அவர் அடித்தும், கழுத்தை அறுத்தும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications