அண்ணியைக் கற்பழித்துக் கொன்று கைதான கமல் ஷா மர்ம சாவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பார்வதி ஷா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மைத்துனர் கமல் ஷா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் ஷா, புதுச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரேம்சந்த் ஷாவின் மனைவி பத்மா ஷா. இவர்களுக்கு ரவி ஷா, கமல் ஷா ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
ரவி ஷாவுக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த பார்வதியைத் திருமணம் செய்து வைத்தனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியன்று வீட்டில் பார்வதி ஷா மட்டும் தனியாக இருந்தார். அப்போது கமல்ஷா, தனது அண்ணியைக் கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்தார்.
முதலில் திருடர்கள் வந்து அண்ணியைக் கொன்று விட்டதாக கமல்ஷா நாடகமாடினார். ஆனால் பார்வதி ஷாவின் சகோதரர்கள் இது கொலை என்று புகார் கூறவே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் உண்மை தெரிய வந்தது.
இந்த வழக்கில் கமல்ஷா, பத்மா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரவி ஷா தலைமறைவாகி விட்டார். இன்னும் அவர் போலீஸ் கையில் சிக்கவில்லை.
ரவி ஷாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. பின்னர் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி ஷா அப்பீல் செய்தார். அதில் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கமல்ஷா. இந்த நிலையில் நேற்று தனது அறைக்கு அடுத்த அறையில் கமல் ஷா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
ஸ்பூனை கூர்மையான கத்தி போல மாற்றி அவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் இது கொலையாக இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. கமல் ஷாவின் மார்பில் குத்தப்பட்ட காயங்களும், வடுக்களும் தெரிகின்றன. எனவே கைதிகளுடன் நடந்த மோதலில் அவர் அடித்தும், கழுத்தை அறுத்தும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications