இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி
டெல்லி: சீனாவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் இதுவரை 28 வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் நேற்று கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கில் கூறியதாவது:
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 28 வீளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு 9 வீரர்கள், தடகளம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு தலா 5 வீரர்கள், வில்வித்தையில் 4 பேர், மல்யுத்தம் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிக்காக தலா 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுதவிர ஒரு நீச்சல் வீரரும் தகுதி பெற்றுள்ளார்.
இன்னும் மற்ற போட்டிகளுக்கு நடக்கும் தகுதிச் சுற்றுகள் அனைத்தும் முடிந்த பிறகுதான் எவ்வளவு பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பதைக் கூறமுடியும்.
சிறந்த வீரர்களை உருவாக்குவதற்குத் தேவையான பயிற்சி முகாம்கள், விஞ்ஞானபூர்வ உபகரணங்கள் வழங்குதல், வெளிநாட்டு பயிற்சியாளர் வசதி ஆகியவற்றை தேசிய விளையாட்டு சம்மேளனத்தின்மூலம் வழங்க இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் உதவி வருகிறது.
பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்களை அமர்த்தி இந்திய அரசு சிறப்பு பயிற்சியை வழங்குவது குறிப்பிடத்தக்கது என்றார் கில்.
சீனா மிரட்டலா?:
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், டெல்லியில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்தக்கூடாது என்று சீன அரசு நிர்பந்திக்கவில்லை. ஜோதி ஓட்டத்தின் பாதையை இந்திய ஒலிம்பிக் சங்கம்தான் தீர்மானித்தது என்றார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications