பாலுவை பதவி நீக்கம் செய்ய வைகோ கோரிக்கை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் டி.ஆர்.பாலு தமது மந்திரி பதவியைப் பயன்படுத்தி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தமது மகன்களால் நிர்வகிக்கப்படும் கிங்ஸ் இந்தியா பவர் கார்ப் பொரேசன், கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பொரேசன் ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் மூலம் எரிவாயு கிடைத்திடச் செய்துள்ளார்.
2007ம் ஆண்டு மார்ச் முதல் 1ம் தேதி இந்திய எரிவாயு ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கனர் டாக்டர் யு.டி. சவுபேயை நேரில் அழைத்து, தமது நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்ய இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு சப்ளை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். சர்மாவுக்கு கடிதம் எழுதுமாறு நிர்ப்பந்தப்படுத்தி உள்ளார்.
அதைத் தொடர்ந்து 2007 மார்ச் 2ம் தேதி எரிவாயு ஆணையத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், இந்தியன் ஆயில் மற்றும் எரிவாயு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் 2006 ஜூன் 28ம் தேதி பெட்ரோலியத்துறை அமைச்சர் முன்னிலையில் டிஆர். பாலு தமது குடும்ப நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்க கோரியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தனது அமைச்சர் பதவியை சொந்த குடும்ப நலனுக்காக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார் பாலு.
இதன் மூலம் மத்திய அமைச்சராக நீடிக்கும் தகுதியையும், தார்மீக உரிமையையும் டி.ஆர். பாலு இழந்து விட்டார். மத்திய அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது.
எனவே டி.ஆர். பாலு மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் டி.ஆர்.பாலு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications