குஷ்பு மீதான 'கற்பு' வழக்குகள்: தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

கடந்த ஆண்டு 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை குஷ்பு, தமிழ்ப் பெண்கள் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும், கல்யாணத்திற்கு முந்தைய உறவில் தவறில்லை, ஆனால் அதில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று பேசினார்.
இதையடுத்து பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் அமைப்புள் உள்ளிட்டவை குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. குஷ்புவின் பேச்சு தமிழ்க் கலாச்சாரத்தை இழிவு செய்வதாகவும், தமிழ்ப் பெண்களின் கற்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக அவை போர்க்கொடி உயர்த்தின.
குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. வழக்குகளும் சரமாரியாக தொடரப்பட்டன. பல்வேறு ஊர் கோர்ட்டுகளிலும் குஷ்பு மீது மொத்தம் 26 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி குஷ்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி தனது தீர்ப்பில் கூறுகையில், குஷ்பு சொன்ன கருத்துக்கள் என்ன நோக்கத்தில் சொல்லப்பட்டது, எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அதற்கு சாட்சி விசாரணையின்போதுதான் விடை கிடைக்கும். எனவே வழக்குகளைத் தள்ளுபடி செய்யாமல் விசாரிக்க வேண்டியது அவசியம்.
கோர்ட் உத்தரவினால் கைது செய்யப்படாமல் இருக்க விதி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விதி விலக்கு அளிக்கும்போது இந்த விஷயம் பற்றி ஏதும் பேசக் கூடாது என்று மாஜிஸ்திரேட் கோர்ட் நிபந்தனை விதித்தது. ஆனால் அந்த நிபந்தனையை அவர் கடைப்பிடிக்க தவறிவிட்டார். மேலும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் இழிவாகப் பேசி பேட்டி அளித்துள்ளார். இதுபோன்ற பேசும்போது அவர் நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார்.
பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும், பேச வேண்டும் என்பதில்லை. இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்தியப் பண்பாடு, தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராக மோசமாக, அவதூறான கருத்துக்களை ஒருவர் தெரிவிக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் நபர் இந்தக் கருத்துக்களினால் தான் புண்பட்டுவிட்டதாக புகார் தரும்பட்சத்தில், அதை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. அதேசமயம், வழக்கின் தன்மை குறித்தும், சூழ்நிலை குறித்தும் ஆராய வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. மாஜிஸ்திரேட் வழக்கு தொடர்பாக விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்த பிறகும், குஷ்பு கட்டுப்பட்டு இருக்க முடியவில்லை.
இவர் மீது வெவ்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே எல்லாவற்றையும் சேர்த்து விசாரிக்கலாம். ஆகவே இந்த வழக்குகள் அனைத்தும் எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். அதை 6 மாதத்திற்குள் எழும்பூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications