மாயாவதி அரசிலிருந்து 2 அமைச்சர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உ.பியில் மாயாவதி அமைச்சரவையிலிருந்து இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
முதல்வர் மாயாவதி தலைமையிலான அமைச்சரவையில் விவசாய கல்வி மற்றும் ஆய்வுத்துரை அமைச்சராக இருந்த கமல்காந்த் கெளதம், மகளிர் நலத்துறை அமைச்சர் வித்யா செளத்ரி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
அவர்களது ராஜினாமா கடிதங்களை ஆளுநர் ராஜேஷ்வர் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மாயாவதி அமைச்சரவையில் புதிதாக இருவர் இணைந்துள்ளனர். இரு இணை அமைச்சர்களை, தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்ளாக மாயாவதி தரம் உயர்த்தியுள்ளார்.
உ.பி. அமைச்சரவையில் தற்போது 30 கேபினட் அமைச்சர்கள், 15 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 7 இணை அமைச்சர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, இன்று 37 அரசு உயர் அதிகாரிகளை (ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையானவர்கள்) மாயாவதி அதிரடியாக மாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications