கருணாநிதியுடன் காங். ஒருங்கிணைப்பாளர் வயலார் ரவி சந்திப்பு
தமிழக காங்கிரஸ் பார்வையாளரான அருண்குமார், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகப் பேசி சிக்கலில் மாட்டினார். இதையடுத்து அவரை திமுகவும், காங்கிரஸ் தலைமையும் ஒதுக்கி வைத்துவிட்டன.
இந் நிலையில் அவரை டம்மியாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதில் வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அவர் இன்று மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தி்ல் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், நான் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட பின் முதல் முறையாக சென்னை வந்துள்ளேன். இதனால் கூட்டணியின் மூத்த தலைவரை சந்தித்து பல விஷயங்கள் குறித்துப் பேசினேன் என்றார்.
கருணாநிதியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு பல மாதமாக அருண்குமார் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.