ராஜபாளையம்: ஆட்டோ-பஸ் மோதலில் 7 பேர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணித்த 7 பேர் பலியாயினர்.
மேலும் மூவர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சோழபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் ஆட்டோவில் ராஜபாளையம் சென்றனர். கோதநாச்சியார் விலக்கு அருகே எதிரே வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
விபத்து குறித்து அறிந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள், இங்கு பஸ்கள் சரிவர நிற்காததால்தான் ஆட்டோக்களில் மக்கள் கூட்டமாக ஏறி பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றனர்.
இதையடுத்து பஸ்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications