கடும் வெயில்: திமுக மகளிர் மாநாடு ஒத்திவைப்பு
சென்னை: கடலூரில் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடப்பதாக இருந்த திமுக மகளிர் அணி மாநாடு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணி மாநாட்டைத் தொடர்ந்து மகளிர் அணி சார்பில் கடலூரில் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் திடீரென மாநாடு ஜூலை மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோருடன், மகளிர் அணி நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் கடும் வெயில் வீசி வருவதாலும், அக்னி நட்சத்திரம் தொடங்கியிருப்பதாலும் மாநாட்டுக்கு வருவோருக்கு பெரும் அசெளகரியமாக இருக்கும் என்பதால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.