தேங்காய் நார் இயந்திரத்தில் பெண் தலை துண்டாகி பலி
குடியாத்தம் தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கிய இளம்பெண் தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார். நெஞ்சை பதற வைக்கும் இந்த கோர விபத்து குடியாத்தத்தில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சக்கரவர்த்திபட்டியில் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு சங்கீதா (18) என்ற பெண் வேலை செய்தார். நேற்று அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கீதாவின் தலை மட்டும் துண்டாகி தூரத்தில் போய் விழுந்தது.
அவரது உடல் மட்டும் உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதைக்கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கீதாவின் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தேங்காய் நார் தொழிற்சாலையின் மிஷின் ஆபரேட்டர் முஜிபுர் ரகுமான் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications