பெரம்பலூரில் ரூ.900 கோடியில் டயர் தொழிற்சாலை
சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.900 கோடியில் புதிய டயர் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
எம்.ஆர்.எப். நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து இந்த தொழிற்சாலையை அமைக்கவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் டிட்கோ தலைவர் மற்றும் எம்.ஆர்.எப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேமன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தத் தொழிற்சாலை ரூ.900 கோடியில் உருவாகிறது. 7000 பேருக்கு இத்தொழிற்சாலை மூலம் வேலை கிடைக்கும்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேமன் பேசுகையில், தமிழகத்தில் உள் கட்டமைப்பு அமைப்புகள் சிறப்பாக இருப்பதால் எங்கள் நிறுவனம் 3வது தொழிற்சாலையை இங்கு அமைத்துள்ளது.
இத்தொழிற்சாலையில் முதல் கட்டமாக 3 லட்சம் ரேடியல் டயர்களும், அடுத்ததாக ஒவ்வொரு மாதமும் 7 லட்சம் டயர்களும் உற்பத்தி செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications