மகாராஷ்டிர சாலை விபத்தில் 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பான்வெல் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் 15 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை - புனே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பான்வெல் என்ற இடத்தில் இந்த கோர விபத்து நேற்று இரவு நடந்தது.
திருமண கோஷ்டியினர் பயணித்த ஜீப் ஒன்று சதாராவிலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. பான்வெல் பகுதியில் ஜீப் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் பெண்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கர விபத்தால் அந்த சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
--












Click it and Unblock the Notifications