டெல்லியில் போலீஸ் பல்கலைகழகம் - ப.சிதம்பரம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், தேசிய போலீஸ் பல்கலைகழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய ராணுவ அகாடமியை முன்மாதிரியாக கொண்டு இந்த பல்கலைகழகம் டெல்லியில் அமைக்கப்படும்.
அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த போலீஸ் துறையை நவீனப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பல்கலை அமைக்கப்படுகிறது. இங்கு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
குற்றவியல், தடயவியல், பொதுமக்கள் தொடர்பு, மனித உரிமை சட்டங்கள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பட்டப்பிடிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற உயர்கல்வி கற்றுத் தரப்படும் என்றார் அவர்.
--












Click it and Unblock the Notifications