குற்றாலம் மலையில் தீவிபத்து - மூலிகைச் செடிகள் சாம்பல்
தென்காசி: குற்றால மலையில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாயின.
குற்றாலத்திற்கும்-பழைய குற்றாலத்திற்கும் இடைப்பட்ட ஆயிரப்பேரி பீட் மலைப்பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்றால் தீ மளமளவென உச்சி மலை வரை கொளுத்துவிட்டு எரிந்தது. இதில் ஏராளமான அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வன விலங்குகளும் தீயில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்ததும் குற்றலாம் வனவர் தார்சிஸ், செங்கோட்டை வனவர் செல்லத்துரை, மற்றும் வன பாதுகாவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக மலைப்பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் நள்ளிரவு வரை தீ அணைய வில்லை.
ஏராளமான மரங்கள் எரிந்துள்ளதால் குற்றால சீசன் தள்ளிபோகுமே என்ற கலக்கத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications