எச்ஐவி, எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்காக அறக்கட்டளை
சென்னை: எச்ஐவி, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தமிழக அரசு புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்க உள்ளது.
மாவட்ட அளவில் எச்ஐவி, எய்ட்ஸ் கட்டுப்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அது தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கான மண்டல கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி பேசுகையில், நாட்டில் 25 லட்சம் பேர் எச்ஐவி மற்றும் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2.47 லட்சம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எச்ஐவி, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்காக ரூ.5 கோடியில் அறக்கட்டளையை அரசு தொடங்க உள்ளது என்றார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் டாக்டர் தாமோதர் பச்சானி, மாநில சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.












Click it and Unblock the Notifications