பருவ மழை குறித்த ஆய்வுகள் திருப்திகரமாக இல்லை: கலாம்
கோவை: இந்தியாவில் பருவ மழைகள் குறித்த ஆய்வுகள் திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இந்திய அறிவியல் மைய கோவை பிரிவு தொடக்க விழா கோவையில் நடந்தது. இதில் அப்துல் கலாம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவில் கடந்த சில காலமாக பூகம்பத்தால் அதிக அளவில் மனித உயிரிழப்புகள் ஏற்படு வருகின்றன.
பல வெளி நாடுகளில் இளம் விஞ்ஞானிகள் பூகம்ப தடுப்பு ஆராய்ச்சி பணியில் ஆர்வமுடன் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பூகம்ப பாதிப்புகள் குறித்த முன்னறிவிப்பு, அதை தடுப்பதற்கான உத்திகள் போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல பருவ மழையை முன்கூட்டியே அறிவிப்பது குறித்த ஆய்வுகளும் திருப்திகரமாக இல்லை. மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்கள் பலத்த மழையால் அதிக சேதங்களை சந்தித்தது.
எனவே பருவ மழை முன்னறிவிப்பில் சர்வதேச அளவில் விரிவான ஆராய்ச்சிகள் அவசியமாகின்றது. இதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications