திருச்சி அகதிகள் முகாமில் இலங்கை வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த 21 வயது இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஏராளமானோர் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கே.செந்தில்நாதன். கடந்த 1990ம் ஆண்டு இங்கு வந்தார். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் விரைந்து வந்து செந்தில்நாதனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications