யாஹூவை வாங்கும் முயற்சியை கைவிட்டது மைக்ரோசாப்ட்

உலகப் புகழ் பெற்ற யாஹூவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்து முதலில் 44.6 பில்லியன் டாலர் தொகையை விலையாக அறிவித்தது. அதாவது யாஹூவின் ஷேர் ஒன்றுக்கு 31 அமெரிக்க டாலரை விலையாக கூறியது மைக்ரோசாப்ட்.
ஆனால் இது குறைந்த விலை என யாஹூ கூறியது. இதையடுத்து 47.5 பில்லியன் டாலராக விலையை ஏற்றியது மைக்ரோசாப்ட். அதாவது ஷேருக்கு 33 அமெரிக்க டாலரை விலையாக அறிவித்தது மைக்ரோசாப்ட்.
ஆனால் யாஹூவோ 57 பில்லியன் டாலர் அதாவது ஷேருக்கு 37 அமெரிக்க டாலர் கேட்டது. இப்படியாக கடந்த 3 மாதங்களாக இரு நிறுவனங்களுக்கும் இடையே இழுபறி நிலவி வந்தது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறஉவனத்தின் தலைமை செயல்அதிகாரி ஸ்டீவன் பால்மரும், யாஹூ இணை நிறுவனர் ஜெர்ரி யாங்கும் சியாட்டிலில் நேற்றுகாலை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து யாஹூவை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்துடன் போட்டியை சமாளிக்கும் வகையில் யாஹூவை வாங்க திட்டமிட்டிருந்தது மைக்ரோசாப்ட். ஆனால் அது விலை படியாததால் கைகூடாமல் போய் விட்டது.












Click it and Unblock the Notifications