விலை உயர்வு: கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் அறிவுரை
கோவில்பட்டி: விலைவாசி உயர்வு பிரச்னையில் குறை கூறுவதை கூட்டணி கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் உபயதுல்லா கூறினார்.
கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டியில் மகளிர் சுய உதவி குழு கட்டிட திறப்பு விழா, அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலக திறப்பு விழா நடைபெற்றது.
நூலக கட்டிடத்தை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் உயதுல்லா திறந்து வைத்தார். மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தை மத்திய அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் உயதுல்லா, விலைவாசி உயர்வு என்பது எல்லா மாநிலங்களிலும் உள்ள ஒன்றுதான்.
மேலே பறக்கும் பட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகதான் கீழே இறக்க முடியும். அதைப் போலதான் விலைவாசி உயர்வையும் படிப்படியாக சரிசெய்ய முடியும்.
ஆனால் விலை உயர்வை காரணம் காட்டி தோழமை கட்சிகளே தொல்லை கொடுக்கின்றனர். அரசை குறை கூறுகின்றனர். அரசு அதற்கான நடவடிக்கையே மேற்கொண்டு வருகிறது. உண்மை நிலையை உணர்ந்து இனிவரும் காலத்தில் தோழமை கட்சிகள் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.