திமுக உள்கட்சி தேர்தலில் போட்டியிட்ட ஏட்டு?
கோவை: கோவை மாவட்ட திமுக உள்கட்சி தேர்தலில் போலீஸ் ஏட்டு ஒருவர் போட்டியிட்டதாக கூறப்படுவதால் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் ஜெயராமன், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஒரு கோஷ்டியும், எஸ்.எம்.டி. பொன்ஸ் ஆகியோர் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் எஸ்.எம்.டி. மற்றும் பொன்ஸ் கோஷ்டி தோல்வி அடைந்தது. இந் நிலையில் எஸ்.எம்.டி என்ற பெயரில் போட்டியிட்டவர் கோவை பயிற்சி கல்லூரி பள்ளியில் ஏட்டாக பணியாற்றி வரும் பொன்னுசாமி என கூறப்படுகிறது.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிர் கோஷ்டியினர் மொட்டை பெட்டிஷன் போட்டிருப்பதாக தெரிகிறது.
அரசியல் கட்சி தேர்தலில் அரசுப்பணியில் இருப்பவர் போட்டியிட்டதாக வெளியான தகவலால் கோவை மாவட்ட போலீஸ் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் தனது உறவினர் ஒருவருக்காகத்தான் வேலை செய்ததாக பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications