சட்டசபையில் அரவாணிகள் பாட்டு பாடிய எம்.எல்.ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருத்தி வீரன் படத்தில் அரவாணிகள் பாடும் ஊரோரம் புளிய மரம் பாடலை, திமுக எம்.எல்.ஏ ஓ.சுப்ரமணியம் இன்று சட்டசபையில் ராகம் போட்டுப் பாடி அசத்தி, அவையைக் கலகலப்பில் ஆழ்த்தினார்.

இன்று சட்டசபையில், கதர், கைத்தறி மற்றும் ஊரகத்தொழில் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பவானி சாகர் தொகுதி திமுக உறுப்பினர் ஓ.சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் அரவாணிகளுக்கு தனி நலவாரியம் அரசு அமைத்திருப்பதை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது "ஊர் ஓரம் புளியமரம்' பாடலை ராகத்துடன் பாடினார்.

இதைத் தொடர்ந்து மனிதனின் மானத்தை காக்கும் ஆடைகள் தரும் கதர், கைத்தறித்துறை மானிய கோரிக்கையின் மீது பேசுவதால் இதற்கும் ஒரு பாடலை பாடுகிறேன் என்று கூறிய சுப்பிரமணியம், "மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்று எண்ணும் குணம் வேண்டும்' என்ற பாடலை ராகத்துடன் பாடினார்.

ஓ.சுப்ரமணியம் பாடல்களைப் பாடியபோது உறுப்பினர்கள் அமைதியாக கேட்டனர். பின்னர் பாட்டுக்கள் முடிந்ததும் மேசையைத் தட்டி பாராட்டி வரவேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+