புனித அமர்நாத்தில் பக்தர்கள் இரட்டை சிவலிங்க தரிசனம்
ஜம்மு: கடந்த ஆண்டு நடந்த குழப்பம்போல் ஆகாமல் இருக்க அமர்நாத் புனித குகைக் கோயிலில் இயற்கை பனிலிங்கத்துடன் புதிய மார்பிள் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகில் இமயமலைச்சாரலில் உள்ள அமர்நாத் புனித மலைக்கோயில் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.
கடந்த ஆண்டு அதிகமான வெப்ப சூழ்நிலையால் இயற்கையாக உருவான சிவலிங்கம் உருகியது. இதனால் பக்தர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
கஷ்டப்பட்டு மலையேறி வந்து லிங்கத்தை தரிசிக்க முடியாமல் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை தற்போது நடந்து வருவதால் பக்தர்களின் வசதிக்காக இயற்கை பனி லிங்கத்தின் அருகிலேயே வெள்ளை சலவைக்கல்லால் ஆன ஐந்தரை அடி உயர பனி லிங்கத்தை கோயில் நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.
ஆனால் தற்போது இயற்கை பனி லிங்கம் ஜோராக உருவாகியிருப்பதால் இத்துடன் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ள மார்பிள் லிங்கத்தையும் சேர்த்து இரட்டை லிங்க தரிசனத்தை பக்தர்கள் பார்த்து மகிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications