பண வீக்கம் 7.61 சதவீதமாக உயர்வு
டெல்லி: பண வீக்க விகிதம் 7.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக அதிகமாகும்.
பண வீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருப்பதால் பண வீக்கமும் உயர்ந்து வருகிறது.
பண வீக்க உயர்வைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பண வீக்கம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், ஏப்ரல் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கம் 7.61 சதவீதமாக இருந்தது.
அதற்கு முந்தைய வாரம் பண வீக்கத்தின் அளவு 7.57 சதவீதமாக இருந்தது. அதிகபட்சமாக கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி, பண வீக்கம் 7.76 சதவீதமாக இருந்தது.
பண வீக்க உயர்வு குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று கருத்துதெரிவிக்கையில், பண வீக்கத்தைக் குறைக்க தேவைப்பட்டால் மேலும் பல நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும். வரும் வாரங்களில் பண வீக்கம் குறையக் கூடும் என்று தெரிவித்தார்.