அட்சய திரிதியை-தமிழகத்தில் 70 டன் தங்கம் விற்பனை
சென்னை: தமிழகத்தில் அட்சய திரிதியையொட்டி கடந்த 2 நாட்களில் 70 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 2 நாட்களாக கொண்டாடப்பட்ட அட்சய திரிதியை தினங்களன்று நகைக் கடைகளை முற்றுகையிட்ட மக்கள் இவ்வளவு தங்கத்தை வாங்கியுள்ளனர்.
நேற்று முன் தினம் கிராம் தங்கம் ரூ.1,085க்கு விற்பனையானது.
நேற்று அது ரூ.1,093 ஆனது. இருந்தாலும் விற்பனை படு வேகமாக இருந்தது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் அட்சய திரிதியையொட்டி 50 டன் தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு அது 70 டன்னாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முதன்மை ஆலோசகர் எல்.கே.எஸ்.சையது அகமது கூறுகையில்,
கடந்த ஆண்டு அட்சய திரிதியை விட இந்த ஆண்டு நகை வியாபாரம் மிகவும் நன்றாகவே இருந்தது. அட்சய திரிதியையில் தங்ககாசுகள் அதிக அளவில் விற்பனையாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தங்க காசுகளை விடவும், நகைகளையே வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கினார்கள். வைரம், பிளாட்டினம் விற்பனையும் நன்றாகவே இருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications