பிளஸ் டூ: திருச்செங்கோடு மாணவி-செங்கல்பட்டு மாணவர் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

Victory
சென்னை: பிளஸ் டூ தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.தாரணியும், செங்கல்பட்டு புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளி மாணவர் எம்.ராஜேஷ்குமாரும் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இருவரும் 1,200க்கு தலா 1,182 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

ஈரோடு கே.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ரம்யாவும், நாமக்கல் மாவட்டம் கூரம்பட்டி வித்யா விகாஸ் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர் தளபதி குமாரவிக்ரமும் 1,181 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

3வது இடத்தை ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.தீபா பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் 1,180.

பிரஞ்சு படித்ததால் முதலிடம் இல்லை...

பிரஞ்சை முதல் பாடமாக எடுத்துப் படித்த சென்னை அண்ணா ஆதர்ஷ் எம்.எச்.எஸ்.எஸ். பள்ளியைச் சேர்ந்த ஆஷா கணேசன் 1,200க்கு 1,191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், தமிழை பயிலாததால் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவி என்ற இடத்தை பெறவில்லை.

சமஸ்கிருதம் படித்ததால்...

அதே போல சென்னை ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.முரளி கிருஷ்ணன் 1,188 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், இவர் தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்து படித்தால் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்தவர் என்ற அங்கீகாரத்தை பெறவில்லை.

சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் ச்ர்ந்த ஹரிஷ் ஸ்ரீராம் 1,187 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரும் சமஸ்கிருதத்தையே முதல் பாடமாக படித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+