இராக் குண்டு வெடிப்பில் 2 தமிழக தொழிலாளிகள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இராக்கில் தனியார் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க ராணுவ முகாமில் பணியாற்றிய 2 தமிழக வாலிபர்கள் குண்டுவெடிப்பில் பலியானார்கள்.

சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில். நாகை மாவட்டம் கீழஈசனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இருவரும் இராக்கில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தனர். அங்குள்ள அமெரிக்க ராணுவ முகாம்களுக்குத் தேவையான தளவாடங்களை இந்த நிறுவனங்கள் சப்ளை செய்து வந்துள்ளன.

செந்திலும், ரமேஷ்குமாரும் அமெரிக்க ராணுவத்துக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி மதிய உணவுக்காக ராணுவ முகாமுக்கு இருவரும் நிறுவனத்தின் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென்று அந்த காரை குண்டு வீசி தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே செந்திலும், ரமேஷ்குமாரும் பலியாயினர்.

அவர்களுடன் வேலைபார்த்தவர்கள் மூலம் இந்த தகவலை தமிழகத்தில் உள்ள அவர்களது பெற்றோர் தெரிந்து கதறி அழுதனர்.

இதில் ரமேஷ்குமாரின் தந்தை சாமியப்பன் தனது மகனின் உடலை தமிழகத்துக்குக் கொண்டு வர உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+