பாளையில் இன்று தலித் கலை விழா
நெல்லை: அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (10ம் தேதி) ஜோதிபுரம் பாளை பஸ் ஸ்டாண்ட் எதிரில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தலித் கலை விழா நடக்கிறது.
நலிந்த கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
விழாவை டில்லி தேசிய மாசு கட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செல்லப்பன் ஐஏஎஸ் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் கலந்து கொள்கிறார்.
மா.கம்யூ மாநில செயலாளர் வரதராஜன், அம்பேத்கார் ஆய்வு மைய தலைவர் தருமராஜன் ஆகியோர் பேசுகின்றனர். விழாவில் அம்பேத்கார் நினைவு சமுதாய பணி இயக்க தலைவர் பொற்செழியன், ஆதிதிராவிட மகஜான சங்க பொருளாளர் குமாரசாமி, தளபதி ஓண்டி வீரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் நையாண்டி மேளம், பறையாட்டம், கரகாட்டம், சக்கையாட்டம், சில்லாட்டம் மற்றும் நாடகங்கள் இடம் பெறுகின்றன.












Click it and Unblock the Notifications