புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், ஜவுளிகளை கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம் பாம்பன், தங்கச்சி மடம், தனுஷ்கோடி கடலோரப்பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தமிழக போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கடத்தல்காரர்கள் தங்கள் கைவரிசையை தொடர்ந்து காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது சூசையப்பர்பட்டினம் பகுதியில் ஒரு நாட்டுப்படகில் 4 பேர் பொருட்களை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களை சோதனையிட்டதில் படகிலிருந்த ஒரு மூட்டையில் 50 கிலோ எடையுள்ள அலுமினிய பவுடர் (வெடி பொருள் தயாரிக்க), இன்னொரு மூடையில் 25 புதிய கைலிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது படகு பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்கள் தங்கச்சி மடத்தை சேர்ந்த படகு உரிமையாளர் சந்தியா (வயது 40), மீனவர்கள் கிறிஸ்துராஜா (34), ஜான் (33), ரோமன்ஸ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. விடுதலைப்புலிகளுக்கு இந்த பொருட்களை கடத்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.
மற்றொவர் கைது
இதே போல் நேற்று முன்தினம் பாம்பன் கடல் பகுதியில் 34 டின்களில் வெடிமருந்துகளும் மற்றும் அலுமினிய சல்பேட், பேட்டரிகள், ஜவுளிகள், கடத்த முயன்ற நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications