இன்ஜினில் கோளாறு-நடுக்காட்டில் நின்றது ஊட்டிமலை ரயில்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ஊட்டி மலை ரயில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளைத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் 273 பயணிகள் இருந்தனர்.
குன்னூர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது ஆடர்லி ரயில் நிலையம் அருகே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அடர்ந்த காட்டுப் பகுதியில் ரயில் நின்றது. உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது.
இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் அங்கிருந்து கல்லார் பகுதிக்கு நடந்து அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மற்றொரு ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.