அந்தமானில் கன மழை-திரும்பி வந்த விமானம்
சென்னை: அந்தமானில் பெய்த கன மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதையடுத்து அங்கு சென்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. பிற விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டனன.
ரன் வேயில் நீர் புகுந்துள்ளதால் சென்னையிலிருந்து சென்ற இந்தியன் நிறுவன விமானம், திருப்பி அனுப்பப்பட்டது. 114 பயணிகளுடன் இன்று காலை சென்னையிலிருந்து சென்ற அந்த விமானம் 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலேயே தரையிறங்கிவிட்டது.
பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போல சென்னையிலிருந்து அந்தமான் செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ், டெக்கன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
அந்தமான்-நிக்கோபார் துணை நிலை ஆளுநர் புபீந்தர் சிங் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் போர்ட் பிளேர் செல்ல சென்னை வந்தார். விமானம் ரத்தானதால் அந்தமான் விருந்தினர் இல்லத்துக்கு கிளம்பிச் சென்றார்.