ஷியா இஸ்லாமியா இமாம் ஆகா கான் டெல்லி வந்தார்
டெல்லி: ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் ஆன்மிகத் தலைவரான ஆகா கான் ஒரு வார பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் 49வது இமாம் ஆக ஆகா கான் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான விழாவில் பங்கேற்க அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
டெல்லிக்கு நேற்று வந்திறங்கிய இமாம் ஆகா கான் அங்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசுவார்.
71 வயதான ஆகா கான் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரையும் சந்திக்கிறார்.
பின்னர் மும்பை, அகமதாபாத் சென்று விட்டு 19ம் தேதியன்று வங்கதேசத்துக்கு கிளம்பிச் செல்கிறார்.
ஆகா கான் அறக்கட்டளை சார்பில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், டான்சானியா, கென்யா, உகாண்டா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் நடத்தப்படுகின்றன.












Click it and Unblock the Notifications