பட்டாசு தயாரித்தபோது விபத்து: பெண் பலி- காயம் 4
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: பட்டாசு வெடிமருந்து எதிர்பாரவிதமாக தீப்பிடித்து வெடித்ததில் ஒரு பெண் உடல் வெந்து பலியானார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே மண்டைக்காடு கிராமம் உள்ளது. இங்கு ஒரு வீட்டில் பட்டாசு தயாரித்து வந்தனர். இங்கு இன்று காலையில் சுசிலா(50), மோகன் (30) உள்பட 5 பேர் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிமருந்தில் தீப்பிடித்ததால் பயங்கரமாக வெடித்தது.
இதில் உடல்கருகிய 5 பேரையும் உடனடியாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுசிலா உயிரிழந்தார்.
பலத்த தீக்காயங்களுடன் மோகன் உயிருக்குப்போராடி வருகிறார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத.












Click it and Unblock the Notifications