கல்லூரி விண்ணப்பத்தில் அரவாணிகளுக்கு தனி இடம் அளிப்பு
நெல்லை: தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரேமாதிரியான விண்ணப்பப் படிவம் வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் பாலினம் என்ற இடத்தில் அரவாணிகளுக்கு 'திருநங்கைகள்' என முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர்த்துவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக எல்லா கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தெரிவுமுறை மதிப்பீட்டு திட்டம் (சி.பி.சி.எஸ்) என்ற புதிய திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுத்த கல்லூரி கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையி்ல் விண்ணப்பப் படிவங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விண்ணப்ப மாதிரி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டது.
இதில் பிளஸ்டூ தேர்வில் பகுதி-3 பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை 800க்கு மாற்றி குறிப்பிடவேண்டும். புதிய இட ஒதுக்கீடு கொள்கைப்படி கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் ஆகிய பிரிவுகள் தனியாக குறிப்பிட வேண்டும்.
மாணவர்களின் புகைப்படம் ஒட்டுவது உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தில் பாலினம் பற்றிய விவரம் குறிப்பிடும் இடத்தில் ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 'திருநங்கை' (அரவாணிகளுக்காக) என்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல், கலை, வணிகவியல் என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வாங்கத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications