Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவன் முன் மனைவியை பலவந்தம் செய்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்: வீட்டில் கணவருடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம் அருகில் உள்ள கடியாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி வசந்தா. இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் காற்றுக்காக வீட்டைத் திறந்து வைத்து விட்டு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் சீனிவாசனின் வீட்டுக்குள் திடீரென்று புகுந்தார். சீனிவாசனுடன் தூங்கிக் கொண்டிருந்த வசந்தாவின் வாயை பொத்தி வெளியே தூக்கி சென்றார்.

அங்கு அவரை பலாத்காரம் செய்ய முயன்றபோது வசந்தா கூச்சலிட்டார். அலறல் கேட்டு அங்கு ஓடிவந்த சீனிவாசன் தன் கண் முன்னே மனைவி பலவந்தம் செய்யப்படுவதை பார்த்து அதிர்ந்தார். உடனே குணசேகரனை அடித்து விரட்டி மனைவியை மீட்டார்.

இது குறித்து வேதாரண்யம் போலீசில் சீனிவாசன் புகார் செய்ததையடுத்து குணசேகரன் கைது செய்யப்பட்டார்.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+