இன்ஜி. அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- பொன்முடி
சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் அதிகமாக கட்டணம் வசூலித்தால் தமிழக அரசே உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; கடந்த ஆண்டு அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசே நடவடிக்கை எடுத்து ஏஐசிடிஇக்கு அறிக்கை அனுப்பியது. ஏஐசிடிஇயும் அவர்களை எச்சரித்து அனுப்பியது.
தொழில் படிப்பு கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியம் தலைமையில் ஒரு குழுவும், மாணவர் சேர்க்கை குறித்து நீதிபதி தணிகாசலம் குழுவும் உள்ளன. கல்வி கட்டணம், நிர்வாக ஒதுக்கீடு குறித்து அக்குழுக்கள் விரைவில் ஆராயந்து ஒரு வாரத்தில் இறுதி அறிக்கையை சமர்பிக்கும்.
அதன்படி அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைதான் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். அதை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணம் கண்காணிக்கப்படும். புகார்கள் வந்தார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்












Click it and Unblock the Notifications