இறைச்சிக்காக கேரளாவுக்கு கடத்தப்பட்ட 49 மாடுகள் மீட்பு
நாகர்கோவில்: கேரளாவுக்கு கடத்த முயன்ற 49 மாடுகளை மீட்டு லாரி, டெம்போக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இறைச்சிக்காக கேரளாவுக்கு மாடு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை ஓழுகினசேரி வழியாக அளவுக்கு அதிகமாக மாடுகள் ஏற்றி வந்த லாரி மற்றும் டெம்போவை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
அதேவழியாக மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த மேலும் 2 டெம்போக்களையும் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது நிற்காமல் விரைந்து சென்றன. இதையடுத்து போலீசார் விரட்டி சென்று வெட்டுர்ணிமடம் அருகே டெம்போக்களை பிடித்தனர்.
லாரியில் 20 மாடுகளும், 3 டெம்போக்களில் 29 மாடுகளும் என மொத்தம் 49 மாடுகள் மீட்கப்பட்டன. லாரி, டெம்போ டிரைவர்கள் ராபர்ட், நெல்லையைச் சேர்ந்த வீரகுணாநிதி, குழிவிளையைச் சேர்ந்த பென்சாம், செல்லப்பன் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாடுகளை கடத்தப் பயன்படுத்திய லாரி மற்றும் டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications