பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டம-உளவுத்துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Pranab Mukarji
டெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அவருக்கு கூடுதல் பாதுகாப்புக்கும் பரிந்துரைத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று உளவுத்துறை கூறியுள்ளது.

ஜெய்ப்பூர் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தலைவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பிரணாப்புக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க டெல்லி மற்றும் மேற்கு வங்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு பிரணாப் அடிக்கடி செல்வார் என்பதால் அம்மாநில போலீசாருக்கும் எச்சரிக்கை குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

முக்கிய துறையான வெளியுறவு துறைக்கு பொறுப்பு வகிப்பதுடன் அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்த ஆலோசனைக்குழு தலைவராகவும் பிரணாப் உள்ளார். பல்வேறு அமைச்சரவை குழுக்களின் தலைவராகவும் அவர் உள்ளார். இதற்கு முன் பாதுகாப்பு துறையை பிரணாப் கவனித்து வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+