ஊமை பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
வீரவநல்லூர்: ஊமை பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
வீரவநல்லூர் அருகேயுள்ள ரெட்டியாபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் லாசர், ஆட்டோ டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்கிறார்.
அதே ஊரை சேர்ந்தவர் கனகமணி. பெற்றோரை இழந்த கனகமணி தனியாக வசித்து வருகிறார். கனகமணி வாய் பேசும் திறன் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் கனகமணி தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த லாசர் கனகமணியின் வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். ஊமை பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைபார்த்த லாசர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து கனகமணியின் உறவினர்கள் வீரவநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து லாசரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications