கரூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்: ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் எல்ஜிபி நகர் வாய்க்கால்மேடு பகுதியில் அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் தலைமையிலான போலீசார் வாய்க்கால்மேடு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான வெடிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications