திருடர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
துறையூர்: துறையூரில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி அடுத்த துறையூரில் உள்ள குண்டு ஆற்று பகுதியில் இன்ஸ்பெக்டர் சுகந்தி உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றில் மறைந்திருந்த ஒரு கும்பல் போலீசாரை பார்த்து ஓடியது.
இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்த செல்வராஜ், சீனிவாசன், சதீஷ். வெங்கடேசன், ராமு என்பது தெரியவந்தது. துறையூர் பகுதியில் கொள்ளையடிக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் பெட்ரோல் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications