போதையி்ல் தகராறு: மப்டி போலீசுக்கு தர்மஅடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: போதையில் பஸ் பயணிகளிடம் தகராறு செய்த மப்டி போலீஸ் ஏட்டுக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது.

நெல்லை ஜங்ஷன் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் 24 மணி நேரமும் இங்கு ஜங்ஷன், பேட்டை, தச்சநல்லூர், ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படுவர். மேலும் குற்றப்பிரிவு போலீசாரும் மப்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேட்டையை சேர்ந்த குற்றப்பிரிவு ஏட்டு ஒருவர் ஜங்ஷன் பஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பயணிகளிடம் தகராறு செய்யவே ஆத்திரமடைந்த பயணிகள் அவர் போலீஸ்காரர் என தெரியாமல் சராமரியாக அடித்து உதைத்தனர்.

இதையறிந்த புறக்காவல் நிலைய போலீசார் உடனே அங்கு வந்து ஏட்டை மீட்டனர். அதன்பிறகுதான் அவர் போலீஸ்காரர் என பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

குடிபோதையில் இருந்ததால் இதுபற்றி அவர் புகார் கொடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் குடிபோதையில் இருந்த ஏட்டுக்கு செம டோஸ்விட்டதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+