ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தேடப்பட்ட 'ஹூஜி' தீவிரவாதி கைது

ஜெய்ப்பூரில் கடந்த 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்குத் தாங்கள்தான் பொறுப்பு என இந்தியன் முஜாஹுதின் என்கிற அமைப்பு கூறியது.
குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் என்று 4 பேரின் கம்ப்யூட்டர் வரைபடங்களை ஜெய்ப்பூர் போலீஸார் வெளியிட்டு அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் ஒரு தீவிரவாதியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஷாஹித். இவர் ஹர்கத் உல் முஜாஹுதின் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதாக போலீஸார் சந்தேகிக்கின்றன். எனவே ஷாஹித்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தீவிரவாதி ஒருவர் தங்கியிருந்ததாக கருதப்படும் ஜெய்ப்பூர் ஹோட்டலின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் வசிக்கும் வங்கதேசத்தினர் மற்றும் ஆப்கன் நாட்டவரை போலீஸார் தீவிர கண்காணிப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்கள் குறித்தப் பட்டியலை தயாரித்து கடும் நடவடிக்ைக எடுக்க மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் உதவிக்கரம்:
இதற்கிடையே, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 கோடி நிவாரணத் தொகையை அளிப்பதாக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறுகையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் இதற்கான காசோலையை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications