ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தேடப்பட்ட 'ஹூஜி' தீவிரவாதி கைது

ஜெய்ப்பூரில் கடந்த 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்குத் தாங்கள்தான் பொறுப்பு என இந்தியன் முஜாஹுதின் என்கிற அமைப்பு கூறியது.
குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் என்று 4 பேரின் கம்ப்யூட்டர் வரைபடங்களை ஜெய்ப்பூர் போலீஸார் வெளியிட்டு அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் ஒரு தீவிரவாதியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஷாஹித். இவர் ஹர்கத் உல் முஜாஹுதின் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதாக போலீஸார் சந்தேகிக்கின்றன். எனவே ஷாஹித்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தீவிரவாதி ஒருவர் தங்கியிருந்ததாக கருதப்படும் ஜெய்ப்பூர் ஹோட்டலின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் வசிக்கும் வங்கதேசத்தினர் மற்றும் ஆப்கன் நாட்டவரை போலீஸார் தீவிர கண்காணிப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்கள் குறித்தப் பட்டியலை தயாரித்து கடும் நடவடிக்ைக எடுக்க மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் உதவிக்கரம்:
இதற்கிடையே, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 கோடி நிவாரணத் தொகையை அளிப்பதாக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறுகையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் இதற்கான காசோலையை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications