ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தேடப்பட்ட 'ஹூஜி' தீவிரவாதி கைது

ஜெய்ப்பூரில் கடந்த 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்குத் தாங்கள்தான் பொறுப்பு என இந்தியன் முஜாஹுதின் என்கிற அமைப்பு கூறியது.
குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் என்று 4 பேரின் கம்ப்யூட்டர் வரைபடங்களை ஜெய்ப்பூர் போலீஸார் வெளியிட்டு அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் ஒரு தீவிரவாதியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஷாஹித். இவர் ஹர்கத் உல் முஜாஹுதின் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதாக போலீஸார் சந்தேகிக்கின்றன். எனவே ஷாஹித்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தீவிரவாதி ஒருவர் தங்கியிருந்ததாக கருதப்படும் ஜெய்ப்பூர் ஹோட்டலின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் வசிக்கும் வங்கதேசத்தினர் மற்றும் ஆப்கன் நாட்டவரை போலீஸார் தீவிர கண்காணிப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்கள் குறித்தப் பட்டியலை தயாரித்து கடும் நடவடிக்ைக எடுக்க மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் உதவிக்கரம்:
இதற்கிடையே, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 கோடி நிவாரணத் தொகையை அளிப்பதாக இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறுகையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் இதற்கான காசோலையை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications