தென்காசி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வியாழக்கிழமை தென்காசி காவல் நிலையத்திற்கு ஒரு மிரட்டல் வந்தது. தொலைபேசியில் பேசிய மர்ம நபர், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் கோவிலுக்கு விரைந்தனர். கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பக்தர்களும் முழுமையாக சோதனையிடப்பட்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் கோவிலின் நுழைவாயிலில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் மெட்டர் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கைது செய்யப்பட்ட மேலப்பாளையம் தீவிரவாதி சையத் காசிம் என்கிற ஹீராவுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications