அபுதாபியில் தமிழக அதிகாரி தற்கொலை
துபாய்: தமிழகத்தைச் சேர்ந்த மார்க்கெட்டிங் அதிகாரி, அபுதாபியில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (42). இவர் அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் ஆக பணியாற்றி வந்தார். நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார் வைத்தியநாதன்.
இந்த நிலையில் அபுதாபியில் தான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் வைத்தியநாதன்.
மிகவும் உயரமான கட்டடத்திலிருந்து குதித்ததால் அவரது உடல் மிகவும் மோசமாக சிதறி விட்டது.
அபுதாபியில்தான் வைத்தியநாதன் வேலை பார்த்து வந்தார். இன்னும் இவருக்குக் கல்யாணம் ஆகவில்லை. கடந்த ஒரு வாரமாகவே அப்செட் ஆக காணப்பட்டாராம் வைத்தியநாதன்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்களிடையே தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண வேலை பார்ப்போர் முதல் நன்கு சம்பளம் வாங்குவோர் வரை பல தரப்பினரும் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.
2 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவர் 9வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவரும் நல்ல வேலையில் இருந்தவர்தான் என்பது குறிப்பிடத்த்கது.