அரிசி பற்றாகுறை: இந்தியாவை நாடுகிறது சவுதி அரசு

அத்தியாவசிய உணவு விலையேற்றத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பாசுமதி அரிசி தவிர்த்த மற்ற அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. பாசுமதி அரிசி ஏற்றுமதி வரியையும் கடுமையாக உயர்த்தியது.
இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் 6வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஆண்டுக்கு சராசரி 9,60,000 டன் அரிசியை இறக்குமதி செய்கிறது. இதில் 5,00,000 முதல் 6,00,000 டன் அரிசியை இந்தியாவில் இருந்துமட்டுமே பெறுகிறது. அதன் மொத்த இறக்குமதியில் 70 சதவீதம் இந்தியாவி்ல் இருந்து பெறப்படுகிறது, குறி்பபாக பாசுமதி அரிசி. தாய்லாந்து நாட்டிலிருந்து 10 சதவீத அரிசியை இறக்குமதி செய்கிறது.
இந்தியாவில் சாதா ரக அரிசி மீதான ஏற்றுமதி தடையினால் சவுதியிலும், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளிலும் தற்போது கடும் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க இந்தியாவின் உதவியை சவுதி அரசு நாடியுள்ளது.
இந்த மாத துவக்கத்தில் சவுதி அரேபியா சென்ற தி்ட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவிடம் இந்திய அரிசி ஏற்றுமதி தொடர்பான பிரச்னைகள் பற்றிதான் அந்நாட்டு அரசு முழுக்க விவாதித்தது.
அரிசி சப்ளை செய்வது மற்றும் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விலக்கு கோருதல் உள்பட பேச்சு நடத்த இந்திய தரப்புக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அரிசி இறக்குமதி பிரச்னை குறித்து சவுதி தொழில் மற்றும் வர்த்தக சபை நிர்வாகிகள் தொடர்ந்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரி ராஜிவ் ஷகாரி தெரிவித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications