ராஜீவ் காந்தி நினைவு தினம் - தலைவர்கள் அஞ்சலி

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
இன்று ராஜீவ் காந்தியின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மேலிடப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுதர்சனம், மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தலைமையில் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியின்போது 500 பெண்களுக்கு இலவச சேலையை கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.
இதேபோல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்திலும் ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications